2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாய் திட்டியதால் ஐஸ்வர்யா மனவேதனை?

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 29 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திலகர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு, கல்லூரி விடுமுறை காரணமாக 8 மாதமாக இவர் வீட்டில் இருந்து ஒன்லையன் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் மற்ற நேரங்களிலும் அடிக்கடி செல்போனைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தாயார் மகளைத் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த மாணவி குடியிருக்கும் அடுக்குமாடியின் நான்காவது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த பின்பு ,மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .