2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருப்பதியில் முறைகேடு; சிக்கிய ஊழியர்

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமலை  

திருப்பதியில் தற்போது தரிசனம் மற்றும் லட்டு முறைகேட்டைத் தடுக்க தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வி.ஐ.பி. பிரேக்

தரிசனத்தை ரத்து செய்ததுடன் இடைத் தரகர்களைக் கட்டுப்படுத்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அளித்து வருகிறது.

மேலும், லட்டு முறைகேட்டைத் தடுக்க ஏழுமலை யானைத் தரிசித்து திரும்பும் அனைவருக்கும் இலவச லட்டு வழங்கி, கூடுதல் லட்டு தேவைப்படுவோருக்கு கட்டுப்பாடு இல்லாமல் லட்டு வழங்கும் திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளது.

இதனால் தரிசன டிக்கெட் மற்றும் லட்டு டிக்கெட் முறைகேட்டில் ஈடுபடும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

மேலும், வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் அனைவரையும் இலஞ்ச ஒழிப்பு  பொலிஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய பின்னரே தரிசனத் துக்கு அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று   வி.ஐ.பி. பிரேக் டிக்கெட் பெற்ற 6 பேர் ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்.

அவர்களை இலஞ்ச ஒழிப்பு  பொலிஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்களுக்குத் தேவஸ்தான ஊழியர் தாமோதர் ரெட்டி, டிக்கெட் கொடுத்தது 

தெரியவந்தது. தலா ரூ.500 மதிப்புள்ள டிக்கெட்டை அவர் ரூ.6 ஆயிரம் என ரூ.24 ஆயிரத்துக்கு 4 டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X