2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்தியபெண்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்கிற இளம் பெண் விஞ்ஞானி, நாசா செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும் 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' விண்கலத்தின் விண்வெளிப் பயணத்தை துல்லியமாக வழிநடத்தி செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்க வைத்திருக்கிறார். ஸ்வாதி மோகனின் இந்த சாதனையை அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது.

மாபெரும் சாதனை புரிந்துள்ள ஸ்வாதி, ‛தி குயின்ட்' தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டு ள்ளதானது,

 இது ஒரு சிறப்பான தருணம். என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனம் செலுத்தினேன் என்று நான் சொல்ல வேண்டும். இப்போது 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாதுகாப் பாக உள்ளது. எனது குடும்பத்துக்கு ஒரு வலுவான பணி நெறிமுறை மற்றும் கல்வியில் அர்ப்பணிப்பு உள்ளது. என் பெற்றோர் எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியை மதிப்பிட்டனர். அவர்கள் இருவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் என்னை தொடர ஆதரித்தனர். நான் என்னை அமெரிக்கராகவும், இந்தியராகவும் கருதுகிறேன்.நாசாவில் அனைவரிடமும் பேசியதில்லை. ஆனால் ஜே.பி.எல்.,லில் நிறைய இந்தியர்கள் மற்றும் தெற்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் உள்ளனர். பலரும் விடாமுயற்சியுடன் இருக்கிறார்கள். இது ஒரு பெரிய கூட்டு முயற்சியாகும். எங்களது அணியில் பாதிபேர் மட்டுமே உள்ளனர். கொரோனா நெறிமுறை காரணமாக இறுதி கட்டத்துக்கு பாதி அணியை மட்டுமே அனுமதிக்க முடிந்தது.

நான் நாசாவில் இருக்கப் போகிறேன் என்று நினைக்கவில்லை. நான் ஒரு குழந்தை மருத்துவராகப் போகிறேன் என்று தான் நீண்ட காலமாக நினைத்திருந்தேன். ஆனால், விண்வெளி குறித்து ஆர்வமாக இருந்தது. பிக் பேங் கோட்பாட்டைப் பற்றி, நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது பற்றி என விண்வெளி பற்றிய புத்தகங்களைப் படித்தேன். மற்றவைகள் ஒவ்வொன்றாக நடந்தன. உங்கள் கனவைப் பின்தொடருங்கள். நான் இந்த சாதனையை நாசாவில் செய்யப்போகிறேன் என்று கனவு கண்டதில்லை. புதியதை கற்றுக் கொண்டே இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X