Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை வெள்ளிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்குப் போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தர விட வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு
அளித்திருந்தார். அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து பவன் குமார் தற்போது மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில், பவன் குமாரின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நாளை காலை தூக்கிலிடுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
8 hours ago
8 hours ago
19 Apr 2024