Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
A.K.M. Ramzy / 2020 மே 25 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 4 நாள்களுக்கு முன்புமேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் உம்பன் புயல் தாக்கியது. மேற்கு வங்கத்தில் கடந்த 20 வருடத்தில் இல்லாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ரூ.1 இலட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு தற்போது கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா பிரச்சினையால் அங்கு புயல் நிவாரணப் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன.
இதனால் இராணுவ வீரர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புயல் பாதித்த வடக்கு 24 பெர்கானா உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் கொல்கத்தாவின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் இன்னும் தொடங்கவில்லை.
இதனால்மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
இது மிகப்பெரிய இயற்கைப் பேரிடர். குறைந்தது 1,000 குழுக்கள் நிவாரணப் பணி களில் ஈடுபட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களும் இரவு பகல் பாராமல் மீட்பு, நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.
எனவே, விரைவில் இயல்புநிலை திரும்பும். அப்படி இல்லைஎன்றால், நான் மன்னிப்பு கேட்கிறேன் அல்லது என் தலையைநீங்கள் வெட்டிவிடுங்கள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
58 minute ago
6 hours ago