2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலி; 40 பேர் படுகாயம்

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம் கராட் சிட்டியிலிருந்து இன்று காலை 5 மணி அளவில் தனியார் சொகுசு பஸ் ஒன்று மும்பையை நோக்கி புறப்பட்டது.

47 பயணிகளுடன் புறப்பட்ட இந்த பேருந்து, மும்பை - பூனா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்? பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

40 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாரதி உட்பட 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காலப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்த கோபோலி பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஸ்ஸில் பயணித்தவர்கள் கராட் பகுதியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் மும்பைக்கு வந்ததாகவும், பஸ் அம்ருதாஞ்சன் பாலம் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .