2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெண்களை ஆபாசமாக படமெடுத்த இளைஞன் கைது

Editorial   / 2019 நவம்பர் 05 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களை ஆபாசமாக படமெடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த  இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அவர், தனது குடும்ப பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் சிலரின் அந்தரங்கப் புகைப்படங்களும், வீடியோக்களும் ஃபேஸ்புக்கில் பரப்பப்டுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதுகுறித்த விசாரணையில், பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கயாஸ் முகமது என்பவருக்கு இதில் தொடர்பு உள்ளதாக தெரிய வந்தது. 

முதுகலைப் பட்டம் படித்த முகமது, ராயப்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில், ஆபாச படங்களை தான் தொடர்ந்து பார்த்து வந்ததால் பெண்கள் உடல் மீதான மோகத்தில், ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க ஆரம்பித்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

வீதிகளில், பேருந்துகளில், ரயில்களில் பெண்கள் செல்லும்போது ஆபாசமாக படம் எடுத்து, அதனை தவறாக சித்திரித்து தனது அடையாளங்களை காட்டிக்கொள்ளாமல் புதியதாக ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து அதில் பதிவேற்றம் செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .