Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை,
மும்பை பைகுல்லா, மஜ்காவ் பகுதியிலுள்ள மஹாரானா பிரதாப் சவுக்கில் 10 மாடிகளை கொண்ட ஜி.எஸ்.டி. அலுவலகம் உள்ளது.
‘ஜி.எஸ்.டி. பவன்’ என அழைக்கப்படும் இந்த கட்டடத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணியளவில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது 9-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது.
ஊழியர்களுக்கு அலுவலகத்திலுள்ள ஒலிபெருக்கியில் அறிவிப்பு கொடுக்கப்பட்டதையடுத்து ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறியுள்ளனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உள்ளே சிக்கி இருந்தவர்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
9-வது மாடியில் முழுவதுமாக பற்றி எரிந்த தீ, 10-வது மாடிக்கும் பரவி கரும்புகை வெளியேறியது.
பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புபடையினரும் விரைந்து வந்தனர். 108 அம்யூலன்ஸ்களும் அங்கு
வரவழைக்கப்பட்டன. 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடித் தீ அணைக்கப்பட்டது. பின்னர் கட்டடத்தை குளிர்விக்கும் பணி தொடர்ந்து நடந்தது.
இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
9 hours ago
29 Mar 2024