2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லிஸ்ட் ரெடி... கைது நடவடிக்கை தொடங்கியது

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி குழந்தைகளின் ஆபாச படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 

இதனை கட்டுப்படுத்தும் வகையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையதளங்களில் பார்த்தாலோ அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தால் குற்றம் எனவும் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

மேலும் இது தொடர்பான பட்டியல் தயார் செய்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், சமூகவலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். 

இவர் வட்ஸ்ஆப் மூலமாக குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக புகார் கூறப்படுகிறது. மேலும் பேஸ்புக் பக்கத்திலும் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார்.  

பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியதாகவும் இதன் அடிப்படையில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .