2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (16.11.2014)

A.P.Mathan   / 2014 நவம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள்  (16.11.2014)
 
மேடம்
 
புத்தம் புதிய ஆடைகள் கிடைக்கும். இதனால் மனம் உற்சாகம் அடையும்.  நல்லவர்களுடைய சேர்க்கைகள் நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகிடைக்கும்;.  
அஸ்வினி : இன்பம் 
பரணி : உற்சாகம் 
கிருத்திகை 1ம் பாதம் : இன்பம் 
 
 
இடபம்
வீண் அலைச்சல்கள் உண்டாகும். மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சனைகள் உண்டாகும் செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும். 
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி : அலைச்சல்
மிருகசீரிஷம் 1, 2 : துன்பம் 
 
 
மிதுனம் 
வியாபாரத்தில் அதிக அளவில் லாபங்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.  நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 
மிருகசீரிடம் 2, 3: இன்பம் 
திருவாதிரை:  லாபம் 
புனர்பூசம்:  மகிழ்ச்சி 
 
 
கடகம்
தீயவர்களின் நட்பினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும்.  சிலவிதமான சிக்கல்கள் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் மனக்கசப்புகள்  தோன்றும். 
புனர்பூசம்: துன்பம்  
பூசம் : நஷ்டம் 
ஆயில்யம்: துக்கம் 
 
 
சிம்மம்
அரசினரால் தனலாபங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல இனிமையான உறக்கங்கள் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம் 
 
 
கன்னி
ஆலய தரிசனங்கள் கிடைக்கும் புண்ணிய செய்திகள் கேட்கும் சூழ்நிலைகள் உருவாகலாம். இதனால் மனம் அமைதியடையும். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி 
அஸ்தம்: இன்பம் 
சித்திரை 1, 2ஆம் பாதம் : இன்பம்
 
 
துலாம்
பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல் மற்றும் சுற்றத்தினர் நண்பர்களின் வருகை ஏற்படும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி: இன்பம் 
விசாகம் 1, 2, 3: இன்பம் 
 
 
விருட்சிகம்
வியாபாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு பகை உண்டாகும். காரியங்கள் தடைபடுதல் சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படும். 
விசாகம் 4: தடைகள்
அனுசம்:  பகை 
கேட்டை: துன்பம்
 
 
தனுசு
அரசாங்கத்தினரால் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வெற்றி உண்டாகும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும்.
மூலம்: பயம்
பூராடம்: துன்பம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: பிரச்சினை
 
 
மகரம்
மனதில் குழப்பமான சூழ்நிலையே நிலவும். பெண்களுடன் வீண் விவாதங்களே உண்டாகும் . எனவே பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும்.
உத்திராடம் 2, 3, 4: குழப்பம்
திருவோணம்: துன்பம் 
அவிட்டம் 1, 2: துக்கம்
 
 
கும்பம்
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் சுற்றத்தினர் நண்பர் வருகை. ஆதனால் பொழுது போக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல் ஆகியவை உண்டாகும்.
அவிட்டம் 3, 4: இன்பம் 
சதயம் : மகிழ்ச்சி 
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
 
 
மீனம்
வீணான செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
பூரட்டாதி 4:  துக்கம் 
உத்திரட்டாதி :  துன்பம்
ரேவதி : நஷ்டம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .