2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (13.05.2015)

A.P.Mathan   / 2015 மே 12 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (13.05.2015)

மேடம்
தூய்மையான ஆடை அணிதல், இதனால் உற்சாகம் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல்.
அஸ்வினி: இன்பம் 
பரணி: உற்சாகம
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
அனாவசிய பேச்சுக்களால் பிரச்சனைகள் வீண் அலைச்சல் ஏற்பட்டு செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: பயம் 
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்


மிதுனம் 
உறவினர் மற்றும் நண்பர்கள் வருகை, இதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும், செலவுகள் அதிகமாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தனலாபம் 
புனர்பூசம்: தொடர்புகள்


கடகம்
உண்ணும் உணவில் வெறுப்பு காணப்படும். இதனால் வீணான மருத்துவ செலவுகள்  காணப்படும்.  இதனால் உடல் நலம் பாதிப்படையும் . எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
புனர்பூசம்: துன்பம்  
பூசம் : துக்கம் 
ஆயில்யம்: வெறுப்பு


சிம்மம்
அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய வருகை நல்ல மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  நல்ல தூக்கம் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


கன்னி
வேண்டாதவர்களுடைய நட்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் தொழிலில் நஷ்டம் உண்டாகும்.  சிலவிதமான சிக்கல்கள் தோன்றும். எனவே நண்பர்கள் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம். 
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: நஷ்டம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம் 


துலாம்
பொன், பொருள் ஆகியவை சேர்க்கை நடைபெறும். இல்லத்தில் உறவினர்களின் வருகை காணப்படும்.  பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடுவீர்கள். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி: இன்பம் 
விசாகம் 1, 2, 3: செலவு


விருட்சிகம்
வேண்டாத பேச்சுகளால் வியாபாரத்தில் நஷ்டம் மற்றும் மனக்கஷ்டங்களை அடைய நேரிடும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.; தீயவர்களின் நட்புக்களை தவிர்ப்பது அவசியம்.
விசாகம் 4: துக்கம் 
அனுசம்: துன்பம்
கேட்டை: நஷ்டம்


தனுசு
செய்யும் செயல்களில் அரசினரால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் தனலாபம் கிட்டும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும்.
மூலம்: வெற்றி 
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம் 


மகரம் 
பெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும். மற்றவர்களினால் பிரச்சனைகள் காணப்படும்.  துன்பங்களை அடைய நேரிடும்.
உத்திராடம் 2, 3, 4: சிக்கல் 
திருவோணம்: துன்பம்  
அவிட்டம் 1, 2: துக்கம்


கும்பம்
மகிழ்ச்சியான செய்திகள் நம் இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும். இதனால் லாபமும் மகிழ்ச்சியும் கிட்டும்.
அவிட்டம் 3, 4 : மகிழ்ச்சி 
சதயம் : இன்பம் 
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்பட்டு காரியங்கள் தடைபடும். திருட்டு போவது இதனால் பயம் வீண் அலைச்சல் ஆகியவைகள் உண்டாகும்.
பூரட்டாதி 4 : பயம் 
உத்திரட்டாதி : தடை 
ரேவதி : துன்பம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .