2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (13.05.2020) பெண்களால் ஆதாயம் ஏற்படும்!

Editorial   / 2020 மே 13 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: இன்று, பொதுவாழ்க்கையால் வியாபாரம் அல்லது தொழில் மாற்றங்கள் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாட்டால் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோரை மிகவும் மதிப்பீர்கள்.

ரிஷபம்: ஆலயதரிசனம் உண்டு. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆதாயம் ஏற்படும்.
மிதுனம்:

வியாபாரத்தில் அதிக இலாபங்களை எதிர்பார்க்க முடியாது. மதிப்பும் மரியாதையும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. உடல் நலக்குறைவால் கல்வியில் தடைகள் ஏற்படும்.

கன்னி: குழந்தைகளோடு குழந்தையாய் மகிழ்வீர்கள். இன்பத்தில், இசையில் இச்சை ஏற்படும். வியாபாரத்தால் ஏற்பட்ட கடன்களால் நெருக்கடி ஏற்படும்.படிப்பில் தடைகள் ஏற்படலாம்.

மகரம்: விவசாய வருமானங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிக்கும். நன்றாக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வீடு, வாகனம் அமையும். இடமாற்றம் ஏற்படலாம்.

கடகம்: இன்று வாகனயோகம், இனிய பயணங்கள் ஆகியவை ஏற்படும். தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். மணவாழ்வில் இன்பம் பெருகும். இனிய கனவுகள் வரும்.

சிம்மம்: எல்லா நலன்களும் உண்டாகும். தனவரவு கூடும். எதிரிகள் மறைவர். பெயரும், புகழும் உண்டாகும். புதுப் பெண்ணின் சிநேகமும், தனக்கென ஒரு தனி வீடும் ஏற்படும்.

துலாம்: அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவு குறையும். சுகமும் குறையும்.

மீனம்: ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆதாயம் ஏற்படும்.

தனுசு: சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது.

விருச்சிகம்: சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், உற்சாகமும் பொங்கும். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகள் மீது அன்பு பெருகும்.

கும்பம்: மருத்துவமனை அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வருமானம் வரும். பண இழப்பு மற்றும் கௌரவக் குறைவுகள் ஏற்படும். கண்மூடித்தனமான காதல் ஏற்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .