2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (29.05.2020) சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்!

Editorial   / 2020 மே 29 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம் - நற்குணம் மாற, கௌரவக் குறைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம் - தாய் சொல்லைத் தட்டாதீர்கள். தூக்கமின்மையால் சோர்வு ஏற்பட்டு முக்கியப் பணிகளில் சுணக்கம் ஏற்படும். பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம்.

மிதுனம் - சகோதர ஒற்றுமை ஓங்கும். உளவாரப் பணிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். அனைத்திலும் வெற்றி நிச்சியம். இன்பச் சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள்.

கன்னி - தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்துப் பெண்கள் வீட்டுச் செலவுகளை அதிகரிக்கச் செய்வர். செலவுகளைக் குறைத்தால் பணமுடையைத் தவிர்க்கலாம். வீண் அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.

மகரம் - காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றித் துணிவுடன் செயல்களில் இறங்கினால். வெற்றி உறுதி.

கடகம் - வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடப்பது பதவி உயர்வுக்கு உதவும்.. வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

சிம்மம்- உங்கள் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆராய்ச்சிக் கல்வியால் தேர்ச்சியும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும். பெரியோரின் அன்பு பொங்கும். தொழில் வளம் பெருகும்.

துலாம் - மனமகிழ்ச்சி அதிகரிக்கும் வண்ணம் தனவரவும் அதிகரிக்கும். ஆரோக்கிய மேம்பாட்டால் ஆனந்தம் பெருகும். கல்வியில் வெற்றி கிடைக்கும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும்.

மீனம் - தொழில் மூலமான தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கென அழகிய தனிவீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.

தனுசு - அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான புனிதப் பயணங்கள் ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

விருச்சிகம் - புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அரசு ஆதரவால் உத்தியோக வாய்ப்புக்கள் பெருகி, வாழ்க்கையில் முன்னேறும் நிலை உருவாகும். தன்னம்பிக்கை, தேகதிடம், தைரியம் ஆகியவை ஓங்கும்.

கும்பம் - மனைவி மூலம் தனவரவு அதிகரிக்கும். சிலரின் காதல் வெற்றி பெற்று கல்யாணத்தில் முடியும். வியாபாரிகள் தங்கள் சாதுர்யமான பேச்சால் அதிகம் இலாபம் ஈட்டுவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X