2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (30.05.2020) இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்!

Editorial   / 2020 மே 30 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. கடமையுணர்வுடன், திறமையுடன் உண்மையாகச் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

ரிஷபம்: தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயன்றால் முடியாததில்லை. முன்னேற முயன்றால் வெற்றி உங்கள் பக்கம்.

மிதுனம்: மனையாளின் ஒத்துழைப்பு மனமகிழ்ச்சி தரும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும்.. புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். மனதில் தைரியமும், புதிய உற்சாகமும் பிறக்கும்.

கன்னி: விரும்பியதற்கு மாறாக வேறு இடத்திற்கு மாற்றங்களை எதிர் பார்க்கலாம். பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டுக் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

மகரம்: வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. மனைவியின் கலகத்தால், உறவுகள்கள் பகையாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் உயர்வுக்கு உதவியாக இருக்கும்.

கடகம்: வீட்டில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு தாமதப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்: தேவைக்கு அதிகமாகவே பணவரவு தாராளமாக இருக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் சீர்படும். உங்கள் தேஜஸ் கூடும்.

துலாம்: ஆசைப்பட்டவை அனைத்தும் ஓசையின்றி நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். பெண்களால் நன்மை உண்டாகும்.

மீனம்: எதிர்பார்ப்புக்கு மேல் தனவரவு கூடும். கல்லூரிக் கனவுகள் நனவாகும். எதிரிகள் பணிவர். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.

தனுசு: பயணங்களால் அனுகூலம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்பட்டு தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புது உற்சாகம் பிறக்கும். புதிய திட்டங்களால் வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்: புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்பட்டு சீரான வருமானத்திற்கு வழி பிறக்கும். சிலருக்கு வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

கும்பம்: பணவரவு பரவசம் தரும். அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .