Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 25 , மு.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவின் யூப்பிரட்டீஸ் நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியால் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், சுமார் 150 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என, அக்கூட்டணி நேற்று முன்தினம் தெரிவித்தது.
சிரியாவின் எல்லைப் பகுதியில், குர்திஷ்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்த அதே சனிக்கிழமை தான், இத்தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. குறித்த படை நடவடிக்கை தொடர்பாக, ஐ.அமெரிக்காவுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா என்பது தெரியவில்லை.
புலனாய்வு அறிக்கைகள் மூலம் பெறப்பட்ட துல்லியமான தகவல்களைக் கொண்டு, இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவித்த கூட்டணி, தமது தாக்குதலின் இலக்குகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் தலைமையகம் ஒன்று, கட்டளைத் தலைமையகம் ஒன்று, கட்டுப்பாட்டு நிலையம் ஒன்று ஆகியன தாக்கப்பட்டன எனத் தெரிவித்தது.
சிரியாவின் அஸ் ஷஃபா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களின் விளைவாக, 145 தொடக்கம் 150 வரையிலான ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.
இத்தாக்குதல்களுக்கு, குர்திஷ் போராளிகள் உள்ளடங்கலான சிரிய ஜனநாயகப் படைகள் உதவின என்றும், ஐ.அமெரிக்கக் கூட்டணி தெரிவிக்கிறது.
தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்றுவரும் சிரியாவில், இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமானதாக மாறியிருந்தாலும், ஒரே நாளில் 150 ஆயுததாரிகள் கொல்லப்பட்டமை, அண்மைக்கால வரலாற்றில் மிக அதிகமான எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago