Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 21 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈக்குவடோரின் சுகாதாரமைச்சர் றொடொல்ஃபோ பர்டான், 19 நாள்கள் மாத்திரம் பதவியிலிருந்த பின்னர் இராஜினாமா செய்துள்ளார்.
வரிசைக்கு முந்தியதாக, தொடர்புகளைக் கொண்டுள்ள தனிநபர்கள் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற பிரச்சினை குறித்து ஈக்குவடோரின் அரச வழக்குத் தொடருநர்கள் விசாரிக்கின்ற நிலையிலேயே குறித்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.
கடுமையாக தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாக, தனது இராஜினாமா கடிதத்தில் பர்டான் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
சுகாதாரமைச்சு, ஈக்குவடோரின் தலைநகர் குயிட்டோவிலுள்ள வைத்தியசாலையொன்றில் தடுப்புமருந்து வழங்கல் தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் தேடுதல் நடத்தியதையடுத்தே குறித்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், முதியோரில்லங்களிலுள்ளவர்களுக்கான தடுப்புமருந்துகளை, அரசியல்வாதிகள், கல்வியலாளர்கள், ஊடகவியாளர்கள் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago