2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

39 சடலங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த லொறி

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டன் நகரின் கிழக்கே தேம்ஸ் நதிக்கரை அருகில் இன்று 39 சடலங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த லொறியை பறிமுதல் செய்த பொலிஸார், சாரதியை கைது செய்தனர்.

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே இன்று ரோந்துப் பணியில் இருந்த பொலிஸார், அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு லொறியை  சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.

லொறியின் உள்ளே கிடந்த 39 பிணங்களை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், சுமார் 25 வயது மதிக்கத்தக்க லொறியின் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கைதான சாரதி, வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ள நிலையில் அந்த லொறியில் இறந்து கிடந்தவர்கள் யார்? அவர்கள் அனைவரும் அடைக்கலம் தேடி லண்டனுக்குள் நுழைய முயன்றவர்களா? அல்லது. வேறு இடத்தில் கொல்லப்பட்ட பிணங்களா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .