2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘82 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்ற படைகள்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரின் யங்கூனுக்கு அருகிலுள்ள நகரமான பகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது றைபிள் கிரனேட்களை கடந்த வெள்ளிக்கிழமஇ ஏவிய பாதுகாப்புப் படைகள், 82 பேரைக் கொன்றதாக, கண்காணிப்புக் குழுவான அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம், மியான்மார் நெள செய்தி ஊடகமும் நேற்று தெரிவித்துள்ளன.

ஸெயார் முனி பகோடா வளாகத்துக்குள் சடலங்களை பாதுகாப்புப் படைகள் குவித்து அப்பகுதியை சுற்றி வளைத்த நிலையில், ஆரம்பித்தில் இங்கு உயிரிழந்தோரின் தகவல்கள் வெளியாகியிருக்கவில்லையென சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும், உள்ளூர் ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிப் பிரயோகமானது வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆரம்பித்து பிற்பகல் வரையில் தொடர்ந்ததாக மியான்மார் நெள தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத்துக்கு எதிரான மியான்மாரிலுள்ள இன இராணுவங்களின் கூட்டணியொன்று கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையமொன்றை நேற்று முன்தினம் தாக்கி குறைந்தது 10 பொலிஸாரைக் கொன்றதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .