2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியது

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் இன்று காலை 9.08 மணி வரையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 90,123-ஆல் உயர்ந்து 5,020,359-ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,290-ஆல் உயர்ந்து 82,066ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் இலங்கை நேரப்படி இன்று  காலை 7.20 மணி வரையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 6,609,420-ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 195,718-ஆகக் காணப்படுகின்றது.

பிரேஸிலானது நேற்றுப் புதிதாக 1,113 புதிய கொவிட்-19 தொற்றுக்களை பதிவுசெய்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு தெரிவித்துள்ள நிலையில் அங்கு கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 133,119ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 36,653-ஆல் உயர்ந்து 4,382,263ஆகக் காணப்படுகின்றது.

அந்தவகையில், உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 30 மில்லியனை நெருங்குவதுடன், கொவிட்-19-ஆல் 935,000 பேர் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .