2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’ஜஸான், நஜ்ரானை இலக்கு வைத்த ஏவுகணைகள் இரண்டை கூட்டணி அழித்தது’

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவுதி அரேபியாவின் ஜஸானை இலக்கு வைத்த, நஜ்ரானை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை சவுதி தலைமையிலான கூட்டணி இடைமறித்து அழித்ததாக கூட்டணி நேற்று  தெரிவித்துள்ளது.

யேமனிய ஹூதிகளால் ஏவப்பட்ட இரண்டு இலக்குகளை வானில் அழித்து சவுதி குடிமக்களுக்கான ஆபத்தைத் தடுத்துள்ளதாக கூட்டணி தெரிவித்ததாக சவுதி அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சவுதி நோக்கி ஈரான் ஆதரவு ஹூதிகளால் ஏவப்பட்ட ஆறு வெடிகுண்டு ட்ரோன்களை அழித்ததாகவும் கூட்டணி தெரிவித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .