Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேற்கு பாகிஸ்தான் நகரான பெஷாவாரிலுள்ள மதப் பாடசாலையொன்றில், குண்டு வெடிப்பொன்றில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், 109 பேர் காயமடைந்ததாக பொலிஸ், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிர் கொலனிப் பகுதியிலுள்ள உள்ளூர் சமூகத்துக்கு மதப் பாடசாலையொன்றாக இருக்கின்ற ஸ்பீன் ஜமாத் பள்ளிவாசலில் இன்று காலை 9 மணிக்கே குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குரானை மாணவர்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக பெஷாவார் பொலிஸ் தலைவர் முஹமட் அலி கான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளானவை ஐந்து தொடக்கம் ஆறு கிலோ கிராம் வரையிலான வெடிப்பு பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், யாரோ வந்து வெடிபொருள்கள் பையொன்றை விட்டுச் சென்றதாகவும் முஹமட் அலி கான் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
8 hours ago
8 hours ago
19 Apr 2024