2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அனைத்து ஊடக உள்ளடக்கங்களையும் முடக்கிய பேஸ்புக்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவில் அனைத்து ஊடக உள்ளடக்கங்களையும் இன்று முடக்கியுள்ளது.

உள்ளடக்கங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடான பிரச்சினையொன்றிலேயே இவ்வாறான நடவடிக்கையை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரயிறுதியில் கதைக்கும்போது செய்தி முடக்கம் தொடர்பாக எதுவித எச்சரிக்கையையும் பேஸ்புக்கின் பிரதம நிறைவேற்றதிகாரி மார்க் ஸக்கர்பேர்க் விடுக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் திறைசேரித் தலைவர் ஜொஷ் பிறைடென்பேர்க் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டங்களின்படி உள்ளூர் பிரசுரிப்பாளர்களுக்கு உள்ளடக்கங்களுக்காக பேஸ்புக்கும், கூகுளும் பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்மைய நாள்களில் சில செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .