2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்ஹராவில் எதியோப்பியாவால் அவசரகாலநிலைப் பிரகடனம்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்வேறு நகரங்களில் வன்முறைக்கு மத்தியில், அம்ஹரா பிராந்திய மாநிலத்தின் தென் பகுதியில் அவசரகாலநிலையொன்றை எதியோப்பியா பிரகடனப்படுத்தியுள்ளது.

அட்டயே நகரத்திலும், ஒரோமியா சிறப்பு வலயங்களிலுள்ள வேறு சில பகுதிகளிலும் கடந்த மூன்று நாள்களில் பயங்கர ஆயுத வன்முறை நிலவியதாக அறிக்கையொன்றில், எதியோப்பிய பாதுகாப்பமைச்சு நேற்றுத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அடையாளந் தெரியாத எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டதாகவும், ஆயுத மோதலிலிருந்து பல பொதுமக்கள் வெளியேறியதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதியோப்பிய இராணுவமானது வட ஷோவா வலயம், ஒரோமோ சிறப்பு வலயத்தில் தரையிறக்கப்பட்ட மறுநாளே அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .