2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அழுத்தத்தை அதிகரிக்க இணக்கம்

Editorial   / 2018 பெப்ரவரி 16 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது அணுக்குண்டு, ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடும்வரை, வடகொரியா மீது அழுத்தங்களைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயும் உறுதிபூண்டுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது என நேற்றுத் தெரிவித்த ஜப்பானிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, அணுக்குண்டுத் திட்டங்களை வடகொரியா முழுமையாகக் கைவிடும்வரை, “பயன்தரக்கூடிய கலந்துரையாடல்கள்” நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என இருவரும் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டது.

கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காக, கலந்துரையாடல்களை ஆரம்பிப்பது பொருத்தமற்றது என, தொலைபேசி உரையாடல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரதமர் அபே குறிப்பிட்டார்.

அத்தோடு, வடகொரியாவுக்கு எதிராக ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை நடைமுறைப்படுத்த, இரு நாடுகளும் தொடர்ச்சியான அழுத்தத்தை வழங்குமெனவும், இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X