2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆப்கானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 31 பேர் பலி

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் பலியானதோடு, 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் காபுலில் அமைந்துள்ள வாக்காளர் பதிவு நிலையம் ஒன்றினை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் குறித்த நிலையத்தின் வாசலில் காத்திருந்த சந்தர்ப்பத்தில் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதோடு, இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு குழு உரிமை கோரியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு காபுலில் அமைந்துள்ள, குறித்த நிலையத்தை தாக்கும் நோக்கத்துடன், தாக்குதல்தாரி குண்டினை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், நான்கு தடவைகள், இந்த நிலையத்தில் வாக்காளர் பதிவு நடைபெற்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .