Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 12 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மிரிலுள்ள ஆயுததாரிகள் “எங்களது சகோதரர்கள்” என்றும் உயிரிழந்தவர்கள் “தியாகிகள்” என்றும் கூறியுள்ள எம்.எல்.ஏ அஜஸ் அஹ்மத் மிர், காஷ்மிர் விவகாரத்தை அமைதிக்குக் கொண்டுவருவதற்கு, அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மிர் சட்டப்பேரவைக்கு முன்னால், நேற்று (11) கருத்து வெளியிடுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மிரின் பாதிக்கப்பட்ட இடத்தைச் சேர்ந்தவரான மிர், ஆயுததாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் வந்துவிட்டது என்றும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை அமைதிக்கு கொண்டுவருவதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
“ஆயுததாரிகளை, பயங்கரவாதிகள், போராளிகள் என்று அழைத்தாலும், அவர்கள் அனைவரும் காஷ்மிரைச் சேர்ந்தவர்களே. அவர்கள், எம்முடைய சகோதரர்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டு, அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்று கோருகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago