2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இந்தோனேஷியப் பணயக்கைதிகளை பிலிப்பைன்ஸ் படைகள் மீட்டன

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 21 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பணயத் தொகைக்கு ஆட்களைக் கடத்தும் அபு சயாஃப் குழுவின் தலைவர் மஜன் சஹிட்ஜுவானைக் கொன்ற பிலிப்பைன்ஸ் படைகள், கடந்தாண்டு இறுதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு இந்தோனேஷியப் பணயக்கைதிகளை மீட்டதாக இன்று இராணுவம் தெரிவித்துள்ளது. 

தென் தவி-தவி மாகாணத்திலுள்ள லன்குயன் நகரத்தில், ஈருடகப் படைவீரர்களுடனான துப்பாக்கிச் சண்டையில் மோசமாகக் காயமுற்ற அபோ மிகே எனப்படும் சஹிட்ஜுவான், பின்னர் உயிரிழந்ததாக, லெப்டினன்ட் ஜெனரல் கொர்லெடோ வினுலன் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

அபு சயாஃப்பால் மேற்கொள்ளப்பட்ட சில கடத்தல்களின் மூளையாக சஹிட்ஜுவானை வினுலன் ஜூனியர் வர்ணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .