2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈராக்கில் மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை - 26 பேர் பலி

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

வேலை வாய்ப்பின்மை, ஊழல், பொருளாதார சரிவு, அரசு நிர்வாக மந்த செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ஈராக்கில் போராட்டம் வெடித்துள்ளது. 

பாக்தாத், பாஸ்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் பரவி வருகிறது. பாக்தாதில் போராட்டக்காரர்கள் நடனமாடியும் முழக்கங்களை எழுப்பியும் வன்முறையில் ஈடுபட்டனர்

பாக்தாத்தில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துகள் வாகனங்களுக்கு தீவைத்தனர். சாலைகளில் கார் டயர்கள் கொளுத்தப்பட்டன

போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் கடும் மோதல் வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். 800 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பாதுகாப்பு படையினர் 180 பேரும் படுகாயமுற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .