2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எச்5என்8 பறவைக் காய்ச்சலை மனிதர்களில் முதலில் கண்டுபிடித்த ரஷ்யா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோழியிலிருந்து மனிதர்களுக்கு கடத்தப்பட்ட பறவைக் காய்ச்சலொன்று தொடரியான எச்5என்8-ஐ ரஷ்யா முதலில் கண்டுபிடித்துள்ளது.

தென் ரஷ்யாவிலுள்ள கோழிப்பண்ணையொன்றிலுள்ள ஏழு பணியாளர்கள், கடந்தாண்டு டிசெம்பர் மாத பரவலொன்றைத் தொடர்ந்து தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஏழு பேரும் தற்போது நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ள ரஷ்ய நுகர்வோர் நலன் கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன பொபொவா, தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டதாகத் கூறியுள்ளார்.

இதேவேளை, மனிதர்களிடையே பரவல் இருந்ததாக எந்த சமிக்ஞையும் இல்லை எனத் தெரிவித்துள்ள பொபொவா, இது உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, தொற்றுக்குள்ளான பணியாளர்களிடமிருந்து குறித்த தொடரியின் மரபணு பாகங்களைத் தனிமைப்படுத்திய ரஷ்ய வெக்டர் ஆய்வுகூடத்தை பொபொவா புகழ்ந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .