2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏழு வாரங்களுக்குப் பின்னர் வெளியில் ஸ்பானியர்கள்

Editorial   / 2020 மே 03 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏழு வாரங்களில் முதற்தடவையாக உடல் நலமிக்க வயதுக்கு வந்தவர்கள் விளையாட்டுகளில் விளையாடுவதற்கு, நடப்பதற்கு ஏதுவாக COVID-19 முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், புதிய முறைமையின் கீழ் வெவ்வேறான வயதுக் குழுக்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெளியே செல்ல முடியும். எவ்வாறெனினும் குறைந்நது இரண்டு மீற்றர்கள் தள்ளி நின்று சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் கண்காணிக்கப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட கடந்த வாரயிறுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஸ்பெய்னில் 217,000க்கும் மேற்பட்டோர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், இன்று வெளியிடப்பட்ட தரவின்படி கடந்த 24 மணித்தியாலங்களில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .