2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ் இன்றி ஈகைத் திருநாள்

Editorial   / 2017 ஜூன் 26 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பல ஆண்டுகளில் முதற்தடவையாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாமல், ஈகைத் திருநாளைக் கொண்டாடக்கூடிய வாய்ப்பு, ஈராக்கின் மொசூல் நகரத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

இந்த நகரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, அந்நகரத்திலிருந்து விரட்டப்பட்ட பின்னணியில், மகிழ்ச்சியுடன், அம்மக்கள் கொண்டாடினர். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்நகரத்தைக் கைப்பற்றியிருந்தது.

நகரின் கிழக்குப் பகுதியில் ஒன்றுகூடிய சிறுவர்கள், கொண்டாடி மகிழ்ந்தனர். சிலர், ஊஞ்சல்களில் விளையாட, ஏனையோர் விளையாட்டுத் துப்பாக்கிகளுடன் விளையாடினர்.

இந்த நகரத்தைக் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, இஸ்லாமின் கடுமையான வடிவத்தை அமுல்படுத்தியதோடு, சிறுவர்களை, ஆயுதங்களுடன் விளையாடுவதற்கு ஊக்குவித்தனர். அத்தோடு, கணிதப் பாடத்தில், குண்டுகளையோ அல்லது துப்பாக்கிச் சன்னங்களையோ கூட்டுமாறும் கழிக்குமாறும் அவர்களது புத்தகங்கள் மாற்றப்பட்டன.

அவர்களின் காலத்தில், ஈகைத் திருநாள் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்பட்ட போதும், கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, நேற்று  இடம்பெற்ற இந்தக் கொண்டாட்டங்கள், அந்த மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவனவாக அமைந்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X