2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐ.நா விசாரணையாளருக்கெதிராக உயிர் அச்சுறுத்தல் விடுத்த சவுதி உயரதிகாரி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 23 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர் அக்னஸ் கலாமார்ட்டுக்கெதிரான சிரேஷ்ட அதிகாரியொருவர் உயிர் அச்சுறுத்தலை விடுத்ததாக, த கார்டியன் இணையளத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபிய ஊடகவியாளர் ஜமால் கஷொக்ஜி கொல்லப்பட்டமை தொடர்பான கலாமார்ட்டின் விசாரணையைத் தொடர்ந்தே குறித்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கலாமார்ட்டை கவனத்தில் எடுப்பதற்காக, ஏனைய சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுடனான சுவிற்ஸர்லாந்தின் ஜெனிவாவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் பெயரிடப்படாத சவுதி அதிகாரியொர்ருவர் இரண்டு தடவைகள் எச்சரித்ததாக, சக ஐ.நா பணியாளரொருவர் கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் எச்சரித்ததாக, கார்டியனுடனான நேர்காணலில் கலாமார்ட் கூறியுள்ளார்.

குறித்த கருத்துக்களானது தனது சகபாடிகளால் உயிர் அச்சுறுத்தலாக அறியப்பட்டதாக கலாமார்ட் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X