2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கடும் வெயிலால் ஒரே நாளில் 40 பேர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலத்தில் நிலவுகின்ற கடுமையான வெயிலின் தாக்கத்தால், ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என, பீகார் மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் மாநில வைத்தியரொருவர், வெயிலின் தாக்கத்தால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 30 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

அத்தோடு, மேலும் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, மாநில அரசாங்கம் சார்பில், தலா 400,000 இந்திய ரூபாய் வழங்கப்படுமென, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .