2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கலிபோர்னியாவில் நால்வர் பலி; 10 பேர் காயம்

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின், வடக்குப் பக்கமாக உள்ள கிராமப் பகுதியொன்றில், ஆயுததாரியொருவரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில், குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

பாடசாலையிலும் ஏனைய இடங்களிலும் இலக்குவைத்துத் தாக்குதல் நடத்திய தாக்குதலாளி, பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகிறது. இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், வீடொன்றில் ஆரம்பித்த இத்தாக்குதல், அப்பகுதியில் உள்ள பல இடங்களுக்கும் பரவியிருந்தது. அதில், குழந்தைகள் பாடசாலையொன்றும் உள்ளடங்குகிறது.

கொல்லப்பட்டவர்களில், சிறுவர்கள் எவரும் உள்ளடங்கவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், என்ன காரணத்துக்காகத் தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். ஆனால், வீட்டு முரண்பாடு காரணமாகவும், அயலவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாமென, அவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

தாக்குதலாளியின் தகவல்களை, பொலிஸாரோ, அதிகாரிகளோ வெளியிடாத போதிலும், 43 வயதான கெவின் ஜான்சன் நீல் என்பவரே தாக்குதலை நடத்தினார் என, ஐ.அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .