2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கியூபாவுக்கு புதிய தலைவர்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியூபாவின் மிகவும் அதிகாரமிக்க பதவியான கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராக மிகேல் டயஸ்-கனல் பெயரிடப்பட்டுள்ளார்.

அந்தவகையில், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் கஸ்ரோவின் பெயரில்லாத முதலாமவராக கியூபாவை டயஸ்-கனல் ஆளவுள்ளார்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குறித்த நகர்வானது நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், கியூபாவின் இரண்டு முக்கியமான பதவிகளான, கியூப கம்யூனிசக் கட்சியின் தலைவராகவும், கியூபாவின் ஜனாதிபதியாகவும் 60 வயதான டயஸ்-கனல் காணப்படுகின்றார்.

ஆக, மேலும் அதிகாரமிக்கவர்களால் ஆளப்படும் இடத்தை நிரப்ப வந்தவர் என்ற வதந்திகளை டயஸ்-கனல் முறியடித்துள்ளார்.

பயிற்சியால் மின்னியல் பொறியலாளரான டயஸ் கனல், கட்சியில் துரித வளர்ச்சி கண்டவராக இருந்தபோதும் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தில் கட்சிக்காக இயங்கியுள்ளார்.

தனது சகோதரர் பிடலை கட்சியின் முதலாவது செயலாளராக தான் பிரதியிட்ட சிறிது காலத்தில், 2012ஆம் ஆண்டு டயஸ்-கனலை உப ஜனாதிபதியாக றாவுல் கஸ்ரோ நியமித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X