2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிரேக்க விபத்தில் 11 பேர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரேக்கத்தின் வடக்குப் பகுதியில், காரொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட தீ காரணமாக, 11 பேர் பலியாகினர்.

குறித்த கார், குடியேற்றவாசிகளைக் கடத்துவதற்காகவே, முன்னர் பயன்படுத்தப்பட்டது எனத் தெரிவித்த பொலிஸார், அதனால், விபத்தில் பலியானோரும், குடியேற்றவாசிகள் என்றே கருதப்படுவதாகத் தெரிவித்தனர்.

குறித்த காரை நிறுத்துவதற்கு, பொலிஸார் முயன்ற போது, பொலிஸாரின் கட்டளையையும் மீறி, அக்கார் சென்றிருந்தது என, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .