2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குறுந்தூர ஏவுகணைகளை ஏவிய வடகொரியா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 24 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த வாரயிறுதியில் இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக, ஐக்கிய அமெரிக்க, தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் மேற்கு கரையோர நகரான ஒன்சொன்னிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரிய பணியாட் தொகுதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சோதனையொன்று உடனே நடைபெறுவதற்கான சமிக்ஞைகளை தென்கொரியா கண்டுபிடித்ததாகவும், சம காலத்தில் அவதானித்ததாக பணியாட்தொகுதி அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .