2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘கொலை முயற்சியிலிருந்து தப்பித்தேன்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நன்றாகத் திட்டமிடப்பட்ட கொலை முயற்சியொன்றிலிருந்து தான் நேற்று தப்பியதாக லிபியாவின் உள்நாட்டமைச்சர் பதி பஷகஹா தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது, தலைநகர் திரிபோலியில் பஷகஹாவின் வாகனத் தொடரணி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பஷகஹாவின் வாகனத் தொடரணியை தமது வாகனமொன்று கடந்தபோது அவரது பாதுகாவலர்கள் அதை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பதவி விலகவுள்ள பிரதமர் பயேஸ் அல்-சராஜ்ஜால் இவ்வாண்டு அமைக்கப்பட்ட ஆயுதப்படையொன்றான நிலைப்படுத்தல் உதவி கருவி, இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X