2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொவிட்-19 தடுப்புமருந்தில் பன்றி உள்ளடக்கங்கள் இல்லை: அஸ்ரனெக்கா

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஸ்ரனெக்கா கொவிட்-19 தடுப்புமருந்தில், பன்றியிலிருந்தான உள்ளடக்கங்கள் எவையுமில்லையென அஸ்ரனெக்கா இன்று தெரிவித்துள்ளது.

இஸ்லாமியச் சட்டத்தை தடுப்புமருந்து மீறுவதான உலகில் அதிகளவு முஸ்லிம்களைக் கொண்ட இந்தோனேஷியாவின் கருத்தை  மறுக்கும் வகையிலேயே மேற்குறித்த கருத்தை அஸ்ரனெக்கா வெளிப்படுத்தியுள்ளது.

பன்றியிலிருந்தான உள்ளடக்கங்களை தயாரிப்பு நடைமுறையின்போது பயன்படுத்துவதால், தடுப்புமருந்தானது ஹராமென, இந்தோனேஷியாவின் உயர் முஸ்லிம் மதபோதகர்கள் சபையான இந்தோனேஷிய உலமா சபை, தமது இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

எவ்வாறெனினும், கொவிட்-19 பரவல் அவசரநிலை காரணமாக, அஸ்ரனெக்கா தடுப்புமருந்தைப் பயன்படுத்த குறித்த சபை அனுமதித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .