2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிரியா - துருக்கி எல்லை பகுதியில் பதற்றம்

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியா மற்றும் துருக்கி நாடுகளின் எல்லை பகுதியில் பதற்றம் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  சிரியா நாட்டின் வடகிழக்கு எல்லை பகுதி துருக்கி நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ளது.  

இங்கு குர்திஷ் போராளிகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  அவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை ஆதரவு அளித்து வந்தது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், படைகள் வாபஸ் பெறப்படும் என கடந்த புதன்கிழமை கூறினார். 

கடந்த வருடங்களில் ஆயிரக்கணக்கான வீரர்களை நாங்கள் இழந்து விட்டோம்.  கோடிக்கணக்கான பணமும் செலவிடப்பட்டு விட்டது என தனது நடவடிக்கையை டிரம்ப் நியாயப்படுத்தினார்.  இதனால் சிரிய ஜனநாயக படைக்கு, அமெரிக்க இராணுவ ஆதரவின்றி போனது.

இதனை தொடர்ந்து, சிரியாவின் வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள குர்திஷ் போராளிகளை விரட்டியடிக்கும் இராணுவ நடவடிக்கைகளை துருக்கி தொடங்கியது.  

இதனிடையே, வடகிழக்கு எல்லை பகுதியில் துருக்கி இராணுவ வீரர்கள் மீது குர்தீஷ் போராளிகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் துருக்கி நாட்டின் 75 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  19 பேர் காயமடைந்தனர். இரு நாடுகளின் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலைக்கு உலக நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .