2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறையிலடைக்கப்படவுள்ள தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸூமா?

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான தென்னாபிரிக்க விசாரணையொன்று, அவரின் மீது சிறைத்தண்டனையொன்றை விதிக்குமாறு அரசமைப்பு நீதிமன்றத்தைக் கோரவுள்ளது.

விசாரணைக்கு முன்னால் சமூகமளிக்குமாறான நேற்றைய உத்தரவை முன்னாள் ஜனாதிபதி ஸூமா மீறியதைத் தொடர்ந்தே மேற்குறித்தவாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விசாரணைக்கு முன்னால் முன்னாள் ஜனாதிபதி ஸூமா தோன்றத் தவறியமைக்கு எந்தவொரு வலிதான காரணமுமில்லை என விசாரணைக்குத் தலைமை தாங்கும் பிரதி நீதியரசர் றேமன்ட் ஸொன்டோ தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ஸூமா ஒத்துழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .