2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீன ஒத்திகைகள்: வான்படையையடுத்து மீண்டும் அனுப்பிய தாய்வான்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் சீனக் கடலிலுள்ள தாய்வானால் கட்டுப்படுத்தப்படும் பிரடஸ் தீவுகளுக்கு அருகில் சீனத் தாக்குதல் விமானங்களும், குண்டுவீச்சு ஒத்திகைகளை நடத்தியதைத் தொடர்ந்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக விமானங்களும் நேற்று தனது வான்படையை அனுப்பியதாக தாய்வானின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

பிரடஸ் தீவுகளுக்கு அருகில் ஒன்பது சீன வான் படை விமானங்கள் கடந்த நேற்று முன்தினம் பறந்தமையைத் தொடர்ந்து, நேற்று எட்டு தாக்குதல் ஜெட்களும், இரண்டு அணு குண்டுத் தாக்குதல் நடத்தக்கூடிய எச்-6 குண்டுவீச்சு விமானங்களும், நீர்மூழ்கிக்கெதிரான விமானமும் தீவுகளுக்கு அருகில் பறந்ததாக தாய்வானின் பாதுகாப்பமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீன விமானத்தை தாய்வான் வான் படை எச்சரித்ததாகவும், செயற்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஏவுகணை அமைப்புகளைத் தரையிறக்கியதாக பாதுகாப்பமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .