2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சோமாலியாவில் 60 ஆயுததாரிகள் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியாவின் மத்திய பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலொன்றில், சுமார் 60 அல்-ஷபாப் ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என நம்புவதாக, ஐ.அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

தமது தாக்குதல், துல்லியமான தாக்குதலாக அமைந்திருந்தது எனக் குறிப்பிட்ட இராணுவம், இதில், பொதுமக்களுக்குக் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனவும் தெரிவித்தது.

அல்-ஷபாப் ஆயுதக் குழுவைத் தாக்குவதற்காக, சோமாலியப் படைகளுடன் இணைந்து, இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என, ஐ.அமெரிக்க இராணுவம் மேலும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .