2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தங்கச் சுரங்க வெடிப்பில் நிலத்தடியில் சிக்கியுள்ள 22 பணியாளர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 12 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் வடகிழக்கிலுள்ள  தங்கச் சுரங்கமொன்றுக்கு மீட்புப் பணியாளர்களை சீன அதிகாரிகள் அனுப்பியுள்ளனர் என ஸின்குவா செய்தி முகவரகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெடிப்பொன்றையடுத்து 22 பணியா நிலத்தடியில் சிக்கியதையடுத்தே இவ்வாறு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஷன்டொங் மாகாணத்திலுள்ள ஸிசெங்க் நகரத்தில் நேற்று முன்தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிக்கியுள்ள சுரங்கப் பணியாளர்களை மீட்புப் பணியாளர்களால் இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என ஷன்டொங்க் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சீன அரசுப் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகை சமூக வலைத்தள பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

ஸின்குவாவின் தகவல்படி நிலத்தடியிலுள்ள  தொடர்பாடல் சமிக்ஞை அமைப்பை வெடிப்பு சேதமாக்கியுள்ள நிலையில், தொடர்பாடல் தடைப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X