2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தாக்குதல் ஜெட்கள் இரண்டை இழந்த தாய்வான்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 22 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்வானின் தென் கரையோரத்தின் நடுவானில் மோதலெனச் சந்தேகிக்கப்படுவதில் தாக்குதல் ஜெட்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்நாட்டு விமானப்படை விமானியொருவர் கொல்லப்பட்டதுடன், இன்னொருவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணியளவில், தென் பிங்டுங் கவுண்டி கரையோரத்திலிருந்து 2.6 கிலோ மீற்றர் தூரத்தில், றாடரிலிருந்து இரண்டு எஃப்-5ஈ ஜெட்கள் காணாமல் போனதாக, அந்நாட்டு தேசிய மீட்புக் கட்டளை நிலையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொன்றிலும் ஒரு விமானியைக் கொண்டிருந்த ஜெட்கள் இரண்டும் கடலில் வீழ்ந்ததாக குறித்த நிலையம் தெரிவித்த நிலையில், ஒரு விமானி உணர்விழந்த நிலையில் கடலில் கண்டுபிடிக்கப்பட்டு, உயிர்ப்பிக்கப்பட முடியாமல் பின்னர் வைத்தியசாலையில் இறந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X