2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திரிபோலி விமானநிலையம் மீது தாக்குதல்

Editorial   / 2020 மே 10 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியத் தலைநகர் திரிபோலி மீது இராணுவத் தளபதி காலிஃபா ஹஃப்தாருக்கு விசுவாசமான படைகள் டசின் கணக்கான றொக்கெட்டுகளை ஏவியதைத் தொடர்ந்து, திரிபோலி விமானநிலையம் மீதான ஷெல் தாக்குதலானது எண்ணெய்க் குதங்களைத் தாக்கியதோடு, பயணிகள் விமானங்களைச் சேதப்படுத்தியுள்ளது. 

80 றொக்கெட் தாக்குதல்களை உள்ளடக்கிய தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாக அறிக்கையொன்றில் உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 முடக்கம் காரணமாக ஐரோப்பாவில் சிக்கியுள்ள லிபியர்களை மீட்பதற்காக ஸ்பெய்னுக்கு பறப்பதற்கு தயாரான விமானமும் சேதமடைந்த விமானங்களுள் உள்ளடங்குவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நேறைய குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து றிக்ஸொஸ் ஹொட்டல், நஸார் காடு, பாப் பென் கஷிர் மாவட்டம் உள்ளடங்கலாக திரிபோலிகளின் சில பகுதிகளில் சேதங்களைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாப் பென் கஷிர் மாவட்டத்திலிருந்து பொதுமக்களை தேசிய இணக்க அரசாங்கப் படைகள் வெளியேற்றியிருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .