2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தென்கொரியாவில் இராணுவப் பயிற்சி

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க இராணுவம், தென்கொரிய இராணுவத்துடன் இணைந்து, குண்டுத் தாக்குதல் பயிற்சிகளை, நேற்று ஆரம்பித்துள்ளது. அதேபோன்று, ரஷ்யாவும் சீனாவும் இணைந்து, தமது கடற்படைப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டம், இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில், அங்கு, வடகொரியப் பிரச்சினை பற்றிய அதிக கவனம் காணப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, இப்பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஐ.அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள், வடகொரியாவுக்கான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகின்றன.

ரஷ்யாவும் சீனாவும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள், ரஷ்ய - வடகொரிய எல்லைக்கு அருகிலேயே மேற்கொள்ளப்படுவதால், கொரியத் தீபகற்பத்திலும் அதன் தாக்கங்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .