2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேவாலயங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 9 பேர் பலி

Editorial   / 2018 மே 13 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசிய நகரான சுரபயாவில் அமைந்துள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒருசில நிமிட இடைவெளியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள், உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த குண்டுத்தாக்குதல்களை, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் ஆயுததார அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஜெம்மா அன்ஷருட் தவ்லா என்ற குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என இந்தோனேசிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .