2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடாளுமன்ற மக்களவை நெறிமுறை குழுத் தலைவராக அத்வானி தெரிவு

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்வானியை, நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத் தலைவராக நியமிப்பதாக, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்கள் 14 பேரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த தலைவர் அத்வானி தலைமையிலான இக்குழு, நெறிமுறைக்குப் புறம்பாகச் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும், அவர்கள் மீது சுமத்தப்படும் புகார்கள் குறித்தும் விசாரித்து, சபாநாயகருக்கு அறிக்கையும் சிபாரிசும் செய்யும்.

இந்தக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தானாக முன்வந்து விசாரித்தும் அறிக்கைகள் சமர்ப்பிக்கும். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலங்களும் தீர்மானங்களும் தொடர்பான குழுவுக்கு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக, தம்பிதுரை எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தையும், ஆராயும் குழுத் தலைவராக சபாநாயகரால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .