2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிலநடுக்கத்தால் 17 பேர் பலி

Editorial   / 2018 ஜூலை 30 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நேற்று  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே இங்குள்ள ரிஞ்சினி மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த 500 இற்கும் மேற்பட்ட வௌிநாட்டவர்கள், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .